கரூர் வரலாறு 5ம் பாகம்
இரண்டாம் உலகப்போரின் போது
கரூரின் நிலை,
இரண்டாம்
உலகப்போர் காரணமாக, இரவில் விளக்குகள் எரிப்பதற்கு கட்டுபபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஊரில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் சுற்றிலும் மூடி போடப்பட்டு இருந்தன. அந்த அந்த
விளக்குகளுக்கு நேர் கீழே இருக்கும் இடங்களில் மட்டுமே வெளிச்சம் இருக்கிறன்ற மாதிரி
தெரு விளக்குகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன.
விமானங்கள் இரவில்
நகரங்களை அடையாளம் கண்டுபிடித்து நகரங்கள் மீது குண்டுகள் வீசாலிமருக்க வேண்டும் என்பதற்காக
எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது. அந்த விளக்குகளும் போர் நடந்த காலங்களில்
தினசரி இரவு பத்து மணிக்கு மேல் முழுமையாக அணைக்கப்பட்டு விடும். அன்றைய கால கட்டத்தில்
நகரத்தில் உள்ள பெரும்பகுதி வீடுகளில் அப்போது மின் இணைப்பு கிடையாது. மாற்றாக மண்ணென்ணெய்
(கெரஸின்) தான் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் அப்போது எளிதில் கிடைக்காத பொருள்
மண்ணென்ணெய்.
எனவே இரவில் ஒன்பது மணிக்கு மேல் விழித்திருப்பவர்களை
பார்ப்பதே அரிதாக இருந்தது. இரவு ஒன்பது மணியிலிருந்து அதிகாலை நான்கரை மணி வரை நகரம்
முழுவதும் இயக்கமே நின்றுபோன மாதிரியான ஒரு தோற்றம் தோன்றும். பகலிலும், நகரில் இப்போது
பார்க்கும் கூட்டத்தை அப்போது திருவிழா நாட்களில் கூட பார்க்க முடியாது. கரூர் நகரின்
வருடந்தோறும் மே மாதம் கடைசி வாரங்களில் வரும் மாரியம்மன் திருவிழா மிகவும் பிரபலமான.
அந்த பண்டிகையின் போது கூட, வண்டி வேஷம் பார்ப்பதற்கு கே.பி.சுந்தராம்பாள் பித்தளைப்
பாத்திரத்தில் அக்னிச் சட்டி எடுப்பதை பார்ப்பதற்கும், அவர் பாடுவதை கேட்பதற்கும் பெருங்கூட்டம்
கூடும்.
இப்போதைய கூட்டங்களை ஒப்பிடும்போது அவை மிகச் சிறியதாகவே
தெரிகிறது. மக்கள் தொகை இவ்வளவு இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைந்திருந்ததாலும்,
செய்தித் தொடர்புகள் இந்த அளவு இல்லாதிருந்ததாலும், தான் அப்போதைய கூட்டம் குறைவு.
அதுபோன்ற காரணங்களால் தான் வாழ்க்கை ஓட்டமும் இவ்வளவு வேகம் நிறைந்ததாகவும் அழுத்தம்
– இறுக்கம் நிறைந்ததாகவும் இருக்கவில்லை.
இன்னும் தொடரும்….
இரண்டாம் உலகப்போர் |
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா |